கொழும்பில் நடைபெற்ற கராத்தேயில் வல்வையைச் சேர்ந்த திருமதி மாலதி பதக்கங்கள் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/10/2016 (வெள்ளிக்கிழமை)
ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் (Srilanka Karate Do Federation) 41 ஆவது தேசிய மட்ட காரத்தே போட்டிகள் கடந்த 25, 26, 27 ஆம் திகதிகளில் கொழும்பு சுகந்தாச உள்ளரங்கத்தில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தனர்.
40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவிலான போட்டியில் வல்வையைச் சேர்ந்த திருமதி மாலதி முரளி , குமிதே (சண்டை) போட்டியில் 2 ஆம் இடத்தினையும், காட்டா போட்டியில் 3 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார். இவர் பருத்தித்துறை தற்காப்புக் கலையகத்தினை (Institute of Martial Arts, Point Pedro) பிரதிநிதித்துவபடுத்தி தேசிய மட்டத்தில் பங்கு பற்றியிருந்தார்.
இவருடன் பங்குபற்றிய பருத்தித்துறை தற்காப்புக் கலையகத்தைச் சேர்ந்த திருமதி ஜெயந்தினி பிரபாகரன் காட்டாப் போட்டி 3 ஆம் இடத்தினையும், சண்டை போட்டியில் 3 ஆம் இடத்தினையும் பெற்றார்.
மேலும் இந்தப் போட்டிகளில் பருத்தித்துறை தற்காப்புக் கலையகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய மட்டப் போட்டியில் 18- 20 வரையான பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்
பருத்தித்துறை தற்காப்புக் கலைய பிரதான பயிற்றுவிப்பாளர் இரட்ணசோதி மாஸ்டரின் (சோதி மாஸ்டர்) கீழ் இவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வன் முரளி பரிதியன், மற்றும் செல்வன் பாலேந்திரன் வசீகரன் போட்டிகளில் பங்குபெற்றிய போதும் வெற்றிபெறத்தவறி விட்டார்கள்.
40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் வடமாகாணத்தைச் சேர்ந்த திருமதி மாலதி தெரிவு செய்யப்படுவது முதல் தடவையாகும். தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய வல்வெட்டித்துறை பங்குபற்றிய திருமதி முரளி மாலதி, தேசிய மட்டத்தில் பங்குபற்றிய செல்வன் பரிதியனின் தாய் என்பதும் இவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக குறித்த இந்தக் தற்காப்புக்கலையை பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
இடமிருந்து வலமாக 2 ஆவது இடத்தில் திருமதி மாலதி முரளி
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.