சிதம்பரக் கல்லுரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க 'நம்பிக்கை நிதியம்' ஸ்தாபகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2018 (திங்கட்கிழமை)
வல்வை சிதம்பராக் கல்லுரியின் கொழும்பு பழைய மாணவர் மன்றத்தின் விசேட பொதுக்கூட்டம் நேற்று 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டி தொடர்மாடி சனசமூக நிலைய மண்டபத்தில் மன்றத் தலைவர்திரு. க. பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் மாலை 5.20 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
மன்றத்தின் செயற்பாடுகள் பற்றி மன்றப் பொருளாளர் Dr. த. கோணேஸ்வரன் அவர்கள் விளக்கிக் கூறும் பொழுது, வெளிநாட்டில் சேகரித்த நிதியை வங்கிகளில் நிலையான வைப்பிலிட்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திலேயே கல்லூரிக்கான மீள்வரும் செலவினங்களைச் செய்வதாகவும் 2000 ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரை ரூபா ஒரு கோடியே ஐம்பத்தைந்து இலட்சங்கள் வரை செலவிட்டுள்ளதாகவும் கூறினார்.
இதை விட மேலதிகமாக, காணிக் கொள்வனவு போன்ற செயற்பாடுகள் வழங்குநர்களால் அளிக்கப்படும் நிதியைக் கொண்டு இன்னொரு புறமாக செய்துவரப்படுவதாகவும் தெரிவித்தார். வருங்காலத்தில் இச்செயற்பாடுகளில் தடங்கல்கள் ஏதும் வராது வண்ணம் சட்டரீதியாக “நம்பிக்கை நிதியம் (Trust Fund)” ஒன்றை அமைக்கும் முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அதன் ஓர் அங்கமாகவே பொதுச்சபையின் அங்கீகாரம் வேண்டி இவ்விசேட கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதைத் தொடர்ந்து மன்றச்செயலாளர் தி. யோகசபாபதிப்பிள்ளை அவர்கள் சபையினருக்கு விநியோகிக்கப்பட்டுள்ள “நம்பிக்கை நிதியம்” நகல் வரைபிலுள்ள விடயங்களையும் அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் உத்தேச அறங்காவலர் சபையின் தன்மை மற்றும் இயக்கம் பற்றியும் விளக்கமளித்தார்.
.
47 அங்கத்தினர் கொண்ட சபை ஏகமனதாக நம்பிக்கை நிதியம் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்ததுடன் அறங்காவலர் சபைக்குத் தேவையான ஐந்து அறங்காவர்களையும் சபையிலிருந்து தெரிவு செய்தது.
மேலும் இவ்விடயங்கள் பொறுப்புடன் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யுமுகமாக தற்போதுள்ள செயற்குழு தொடர்ந்து இன்னும் ஒரு வருடம் பதவியில் நீடிக்க, சபை ஏகமனதாக அனுமதியும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.