வல்வெட்டித்துறை மோதல் - மேலும் 15 பேர் விளக்கமறியலில்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2018 (வியாழக்கிழமை)
வல்வை நெடியகாட்டுப் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட விளையாட்டு மைதானக் காணியை அளக்க முற்பட்ட போது இரு விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே நால்வர் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் இரு தரப்பிலும் இருந்து மேலும் 15 பேர் கைதாகியுள்ளதாக வல்வெட்டித்துறைப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு தரப்பிலிருந்து 5 பெரும் இன்னொரு தரப்பிலிருந்து 10 பேருமாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பருத்தித்துறை நீதி மன்றில் முற்படுத்திய போது 25 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த 9 ஆம் திகதி நெடியக்கட்டுப் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றது.
இதி 14 பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்கண்டவாறு இன்றைய தினக்குரல் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.