வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் கலை இலக்கிய விழா தொடர்ந்து 10 ஆவது வருடமாக எதிர்வரும் 1 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு யா/ வல்வை மகளீர் மகா வித்தியாலய விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெறவுள்ளது.
இக் கலை இலக்கிய விழா வல்வை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் தலைவர் தலைமையில் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு நடராஜா தெய்வேந்திரராஜா (இளைப்பாறிய அதிபர், யா/ஹாட்லிக் கல்லூரி) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு சிவகுரு பாஸ்கரன் (Captain, நாடக கலைஞர்) அவர்களும், திருமதி ஞானதர்சினி கிருபாகரன் (ஆசிரியர் யா/உடுப்பிடி மகளீர் கல்லூரி) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
அத்துடன் திரு பாலசுந்தரம் உதயகுமார் (பா.தங்கத் தமிழன் - எழுத்தாளர், இயக்குனர், நாகட கலைஞர்) அவர்களுக்கு கலைஞர் கெளரவிற்பும் , அதனைத் தொடர்ந்து நெய்தல் மலர் 10 வது இதழ் வெளியீடும் இடம்பெறவுள்ளது. நெய்தல் முதற்பிரதியை திரு.பூதத்தம்பி சக்திவேல் (இளைப்பாறிய அதிபர், யா/ அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை) அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.
அதனைத் தொடர்ந்து விருது வழங்கல், கலை நிகழ்வுகள் என்பன நடைபெறவுள்ளன.
இக்கலை விழாவிற்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வல்வை கலை இலக்கிய மன்றத்தினர் அழைக்கின்றார்கள் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.