வல்வைப் படுகொலைகள் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2019 (வெள்ளிக்கிழமை)
கடந்த 30 வருடங்கள் முன்பு, அதாவது 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, வல்வையில் படுகொலை செய்யப்பட்ட 63 பொது மக்கள் ஞாபகார்த்த நினைவஞ்சலி நிகழ்வு இன்று காலை வல்வெட்டித்துறைச் சந்தியில் இடம்பெற்றது.
வல்வை நகரசபைத் தலைவர் திரு.கோ.கருணாநந்தராசா அவர்கள் தலமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம், முன்னாள் வல்வை பிரஜைகள் குழுத் தலைவரும் தற்போதைய நகரசபை உறுப்பினருமாகிய திரு.செல்வேந்திரா, முன்னாள் வல்வை நகரசபைத் தலைவர் ந.அனந்தராஜ் மற்றும் வல்வை நகரசபை உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.