வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 48 வது ஆண்டு விழாவும் பாலர் தின விழாவும் இன்று 02.08.2015 (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் கோயில் வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு விருந்தினர்கள் சிறார்களின் பாண்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டனர்.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு. பூ.அகமணிதேவா் அவா்கள் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு கணபதி படிப்பகத்தின் முன்னாள் தலைவரும், சமாதான நீதவானுமாகிய திரு.ம.சங்கரகாந்திலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.
நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வடமேற்கு வெளி வீதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் சிறார்களின் 3 0 பாலர் நிகழ்வுகள் இடம்பெற்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.