பரு பிரதேச செயலக கலைஞர்களிடம் கலாபூஷண விருதுக்கு விண்ணப்பம் கோரல்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2019 (வெள்ளிக்கிழமை)
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் 2019ஆம் ஆண்டிற்கான கலாபூஷண விருதுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதால் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 60 வயதிற்கு மேற்பட்ட கலாபூஷண விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த கலைஞர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தை பருத்தித்துறை பிரதேச செயலக கலாச்சார கிளையில் பெற்று எதிர்வரும் 2019.06.05 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்து பிரதேச செயலகத்தில் ஒப்படைக்குமாறு பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை ஸ்ரீ அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட முறையில் கலாபூஷண விருதுக்கு விண்ணப்பம் கோரல் நடைபெறமாட்டாது என்பதுடன் கடந்த வருடங்களில் கலைஞர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2019 ஆம் ஆண்டிற்கோ அல்லது எதிர்வரும் வருடங்களுக்கோ செல்லுபடியாகாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.(தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.