வல்வை றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் விளையாட்டு அறைக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இன்று காலை 8-50 மணியளவில் விளையாட்டு அறைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கழகத்தலைவர் ஐ.சண்முகரட்ணம் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் ச . சுகிர்தன், தர்மலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கோ .கருணானந்தராசா மற்றும் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
புதிய அபிவிருத்தி கிராம எழுச்சி (கம்பரலியா) திட்டத்தின் கீழ் கிராம அமைப்புகளுக்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வடமராட்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் M. A சுமந்திரன் அவர்களின் ஒதுக்கீடு செய்த ரூபா பத்து லட்சம் செலவில் கழக விளையாட்டு அறை மற்றும் இதர வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.