கல்முனை மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வல்வை நகரசபை நடாத்தும் அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2019 (வெள்ளிக்கிழமை)
கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தர முயர்த்தகோரி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதராவாக வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர், துணைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நடாத்தும் அடையாள உண்ணாவிரதம்
இடம் : வல்வெட்டித்துறை மத்திய பேருந்து நிலைய முன்றல்
காலம்: 22.06.2019 சனிக்கிழமை
காலை 8:00 மணி தொடக்கம் பி.ப 4:00 மணி வரை
வல்வெட்டித்துறை நகரசபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ் அடையாள உண்ணா விரத நிகழ்வில் பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூகஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொண்டு கல்முனை மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.