வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கம்பர்மலை இளைஞர்கள் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2019 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை கம்பர்மலை மக்களின் ஆதரவுடன் பொன்கந்தையா சனசமூக இளைஞர்களினால் வன்னியில் கனமழையால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உலருணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நத்தார் தினமான இன்று புதன்கிழமை( 25.12.2019) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வன்னியில் தொடர்ச்சியாகப் பெய்த அடைமழையால் பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாகப் பொதுமக்கள் பொதுமண்டபங்கள், பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் எனும் கிராமத்தில் ஒரு பொது நோக்கு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நூறு குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஒரு குடும்பத்துக்கு10 kg அரிசி, 5 kg மா, 2 kg சீனி, 1 kg பருப்பு, 1 மீன் ரின் ஒரு தேயிலைப் பை 2 சோயா மீற் பை எனும் அடிப்படையில் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.