புதிய 2020 ஆண்டில் புனிதம் பெறும் வல்வெட்டித்துறை மாநகர்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2019 (சனிக்கிழமை)
பிறக்கும் புதிய ஆண்டு வல்வெட்டித்துறை மக்கள் பழமையை புதிப்பித்து புதிய வரலாற்றை எழுதிக்கொள்கிறது.
வல்வெட்டித்தறை மக்களுடன் பின்னிப்பிணைந்த 38 தெய்வக்கோயில்களில் புனித செபஸ்தியார் ஆலயம் தெய்விக சொருபம் பிரதிஸ்டை செய்ப்பட்ட 300 வது வருட கொண்டாட்டங்களை கொண்டாட இருக்கின்றது.
புனித செபஸ்தியார் தேவாலயமும் ஒரே எல்லையில் அமைந்த உலககுடையார் திருக்கோயிலும் உலக வரலாற்றில் அரிதாக காணப்படும் பொக்கிசங்ளாக காணப்படுகின்றது.
எம் மண்ணில் ஆறு காலப் பூசைகள் நடைபெறும் திருக் கோயிலான வையித்திஸ்வரன் கோயிலின் மேற்கு வீதி கோபுரம் 07.02.2020ல் மகா கும்பாபிசேகம் நடைபெற இருக்கின்றது.
இப் புனித காரியங்களில நேரில்; பங்கு கொள்ளும் பாக்கியம் புலம்பெயர்ந்த எம்மில் பலருக்கு கிடைக்காமல் போகின்றது. ஆனால் அதற்கான தெய்வீக கொடுப்பணவுகளை செய்வதற்க்கு இதை பார்க்கும்; உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உரிமையுடன் பாக்கியம் கிடைத்துள்ளது.
உலக வரலாறறில் மனிதப் பரம்பல் கால காலமாக பல நூற்றாண்டு காலமாகவே நடைபெற்று வருகின்றது. இறுதியாக போராட்ட வடிவதினால் நாம் வல்வெட்டித்மறை மக்கள் மீண்டும் பரம்பல் அடையத்தொடங்கி நாற்பது வருடங்களை தாண்டிச் செல்கிறது. ஆனால் இன்னும் சொற்ப வருடங்களுடன் புலம்பெயர் ஊர் மக்கள் ஊர் வந்து செல்லும் தொடர்புகள் மருகி முழவதுமாக அற்றுப்போகின்ற நிலைதான் ஏற்படும்.
தற்சமயம் புலம்பெயர் தேசத்தில் உள்ள புலம்பெயர்ந்த வல்வெட்டித்தறை மக்களின் மூத்தசமுதாயத்தினர் வல்வெட்டித்தறை மக்களின் சமுதாய கட்டமைப்பின்படி இளையசமுதாயத்தை கட்டு கோப்புக்குள் வைத்திரப்பதற்காக பல நட்புக் குழக்களை அமைத்து தனது வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கின்றது. இது தவிர எந்த செய்தியில் வரமாலும் விளம்பரம் இன்றி ஒரு சில நட்பு குழக்கள் வன்னி மண்ணில் சில கல்விக்கடமைளை செய்து கொண்டு இருக்கின்றது. இவர்கள் இன்று மறை பொருளாக இருந்தாலும் வல்வை வாசத்தில் வல்வெட்டித்தறையின் கால வரலாற்றில் வரைந்து வைக்கப்படுவார்கள்.
புலம்பெயர்;ந்த வல்வெட்டித்துறை மக்களின் புதிய பயணமாக 2020ன் கோடை விடுமுறையில் ஒரு நட்பு வட்டக்குழுவினர் ஊர் வந்து ஒன்று கூடல் நடாத்த உள்ளார்கள். அவர்கள் ஊர் வந்து தமது சமுதாயத்திற்கு பெரிதாக எதையும் செய்து விட்டுத்தான் வருவார்கள். வல்வெட்டித்துறை மக்கள் ஊர் சமுதாய மரபில் ஊறிப்போனவர்கள்.
நாம் ஊர் கோயில்களை திரும்ப அழகுடன் புணரமைத்து தமது கடமைகளை நிறைவாக செய்துள்ளார்கள். ஆனால் ஒரு சில கோயில்கள் பக்தர்களோ கோயில் நிர்வாகத்தினரோ இல்லாமல் ஜயர் வந்து தனியாக பூசை முடித்து சென்றதையும் அங்கு சென்ற புலம்பெயர் மக்களால் பார்க்கப்பட்டது.
தற்போது வல்வெட்டித்தறை மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆர்வலர்கள் புத்திஜிவிகள் மற்றும் இளையசமுதயத்தினர் தம்மை புதியபாணியில் நற்பணியில் இணைத்து கொள்ளவேண்டிய காலத்தில் இருக்கின்றீர்கள்.
நம் வல்வெட்டித்துறை மண் வடக்கு எல்லையை கடற்கரையை எல்லையாக கொண்ட ஊர். அதில் பழனியப்பா திடல் முதல் ஆதியில் கோயில் கொண்ட ஆதிகோவிலடி வரை உள்ள வீதியை நடப்போர் சங்க மேடை வீதியாக அமைத்து
அதிகாலையும் மாலையும் நடைப்பயிற்சியை செய்யலாம்.
இதை ஒரு விழாவாக கழகங்ளில் இருந்து முதல் 10 பேர்களாகவும் பாடசாலைகளில் இருந்து சில மாணவர்களும் கலந்து கொள்ளும் நிகழ்வுடன் ஆரம்பிப்தற்கு வல்வெட்டித்துறை விளையாட்டுக்கழக தலைவருடன் ஆலோசிக்கப்பட்டது. ஏனொனில் இது பற்றி முயற்சிக்க முயலவில்லை. இப்படிப்பட்ட நல்ல முயற்சி மெட்றாஸ் பெசன்நகர் பகுதியில் காலை மாலை 200க்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்கின்றார்கள். அவர்களுக்கு சிறந்த இலவச வைத்திய பரிசோதனைகள் மருத்துவம் நடைமுறை பிரச்சனைக்கான எல்லா உதவிகளும் வழங்கப்படுகின்றது.
ஏமது கடற்கரையோர மண்ணில் தேவையான வாசிகசாலைகள் இருக்கின்றது. நாமும் மருத்துவ உதவிகள் பாடசாலை பிள்ளைகளுக்கான பயிற்சி வகுப்புக்கள். நட்பு உறவினர்கள் சந்திபபுக்ள் விசேடமாக புலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து வந்தவர்களை சந்திப்பதற்கம் ஆலோசிப்பதற்காகவும் நீண்ட காலப்பயன்களைத்தரும். புலம்பெயர்;ந்து ஊhவரும் மக்களும் ஊரவர்களும் அவர் வீடுகளுக்கு போய் அவர் அவர்கள் சந்திப்பற்க்கு ஏதோ ஒன்று எம்மை தடுப்பது எம்மால் எல்லோராலும் உணரப்பட்ட ஒன்றுதான். ஆனால் கோயில் திருவிழாக்களில் மனம் விட்டு மகிழ்வாக உறவாடுகின்றோம். அவை போதுமானது அல்ல. வல்வெட்டித்துறை மக்களுக்குள் அடங்கியிருக்கும் ஓர்மம் விவாதங்களின் பின் வரும் முடிவுகள் பல வரலாற்றை எழுதிச்சென்றவை. எல்லா காலங்களிலும் வரும் புலம்பெயர் வல்வெட்டித்துறை மக்களின் மனங்களை வென்று கடற்கரைசாலை நடப்போர் சங்கம் வெற்றி பாதையில் பயணிக்க வல்வெட்டித்துறை வாசம் கொண்ட புத்திஜீவிகள் புதுவருட தினத்தில் ஆரம்பிக்க முயற்சிக்கவும்.
21.12.2019ல் இங்கிலாந்து வல்வெட்டித்துறை மக்களின் வருடந்த குளிர்கால ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற தாயூர் மக்களின் சார்பில் ஆசிர்வாதங்கள். இங்கிலாந்து வல்வெட்த்துறை நலன்புரிச்சங்க நிர்வாகத்தில் போதிய பெண்கள் பங்களிப்பு இல்லாமல் இருக்கின்றது. அவுஸ்திரேலியா வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கம் பெண்கள் பங்களிப்புடன் தரமான செயல்பாடுகள். இவர்கள் வருடாந்த நிர்வாக தெரிவுகளை ஒன்று கூடலில் நடத்துவதால் பல வெற்றிகளை தொட்டுள்ளார்கள். பொதுக் கூட்டங்களுக்கு மக்கள் வருவதில்லை என்று குறை பட்டுக்கொள்வதை விட பொது மக்கள் கூட்டாக வரும் இடங்களில் கூட்டத்தை நடாத்துவதுதான் நல்லது. இனி வருங்காலங்களில் உலக வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கள் வசந்த கால ஒன்று கூடல்களில் நிர்வாக கூட்டங்களை நடாத்தி பெண்களையும் இணைத்து இளையோர் அமைப்புக்களை கட்டியமைக்க முயற்சிக்கவும்.
எம் வீட்டு முற்றத்திலிருந்து ஆரம்பித்த ஊர் இன்று ஜந்து கண்டங்களையும் வியாவித்து நிற்கின்றோம். கூறை வேட்டியில் தலைபாகை கட்டி மாங்கலியம்வாழ்வு கொண்டு வாழும் இன ஊர் நாங்கள். நாற்பது வருடங்களுக்கு பிறகும் வல்வெட்டித்துறை மண்ணுக்கு வந்தவர்களும் உண்டு வராத உங்களுக்கு ஏன் தயக்கம் ஒரு முறை வந்து விடுங்கள் எம் தாயூரில் விதையாகிய ஆயிரத்துக்கும் அதிகான மாவீரர்கள் உங்களையும் ஆசிர்வதிப்பார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.