உயர்தர பரீட்சை சான்றிதழை எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் பெற்றுக்கொள்ள முடியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2019 (சனிக்கிழமை)
இம்முறை நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் தபாலில் சேர்க்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை மீள்திருத்தப்பணிகள்( Recorrection ) எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
இம்முறை உயர் தர பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையில் 2,678 மத்திய நிலையங்களில் நடைபெற்றது. பரீட்சையில் 337,704 பேர் தோற்றியுள்ளனர். இவர்களுள் 181,126 பேர் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள 3 பாடத்திட்டங்களில் 187,167 பேர் தோற்றியுள்ளனர். பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக 3 பாடங்களுக்காக தோற்றிய பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 94,609 ஆகும்.
பரீட்சை விதிமுறைகளை மீறிய 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. தேசிய மற்றும் வெளிநாட்டு உயர்தர பரீட்சைக்கான பரிட்சை சான்றிதழ்களை எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் பெற்றுக்கொள்ள முடியும்.
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான doenets.lk மூலம் online சான்றிதளுக்கு விண்ணப்பித்து அதன் உடாக 48 மணித்தியால காலப்பகுதிக்குள் சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும்.
எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி தொடக்கம் பரீட்சை திணைக்களத்திற்கு விஜயம் செய்து ஒரு நாள் சேவை அல்லது வழமையான சேவையின் மூலம் பரீட்சை சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.