உதயசூரியன் கழகம் பிரித்தானியவின் முழுமையான ஆதரவுடன், வல்வை விக்னேஸ்வரா சனசமூகசேவா நிலையமும் வல்வை உதயசூரியன் கழகமும் இணைந்து நடாத்தவிருக்கும் புலமைப்பரிசில் வகுப்புக்கள், வல்வை உதயசூரியன் கழக மண்டபத்தில் தலைவர் சி.மோ.சிவமயம் தலைமையில் நேற்று 03.01.2020 மாலை 05.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கழக அங்கத்தவர்களால் மங்கள விளக்கேற்றல் வைபவம் இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றன. கலந்து கொண்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இறுதியாக கல்வி கற்பிக்கவிருக்கும் ஆசிரியர் திரு.கி.ஜெனத்மேனன் அவர்களால் ஆரம்ப நாள் வகுப்பு நடாத்தப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.