வல்வை வி.கழக வடமாகாண உதைப்பந்து - கரணவாய் மத்தி 2ஆம் சுற்றுக்கு தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2020 (வியாழக்கிழமை)
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
அந்தவகையில் நேற்றைய தினம் (12/02/2020) இடம்பெற்ற போட்டியில் அல்வாய் நக்கீரன் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து கரணவாய் மத்தி விளையாட்டுக்கழகமானது மோதியது. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கலி னை பெற்றதனால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடுவர்களினால் வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு உதையில் 4:2என்ற கோல்கணக்கில் கரணவாய் மத்தி அணியானது வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது.
கரணவாய் மத்தி அணிக்காக பெறப்பட்ட இரு கோல்களினையும் சிவதர்சன் பெற்றுக்கொடுக்க நக்கீரன் அணிக்காக விபூசன் திவேந்திரா தலா ஒரு கோலினை பெற்றுக்கொடுத்தனர்.
ஆட்ட நாயகனாக கரணவாய் மத்தி விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த சிவதர்சன் தெரிவு செய்யப்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.