வல்வெட்டிதுறை (ஆலடி சந்தி), தொண்டைமனாறு, வல்வெட்டி (வன்னிச்சி அம்மன் கோவிலடி), பொலிகண்டி (வீரபத்திரர் கோவிலடி) வாழ் இலங்கை வங்கி வாடிக்கையாளர்களே!
தொடரும் ஊரடங்கு மற்றும் அசாதாரண சூழ்நிலையால் உங்கள் அவசர பணத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வங்கிகளுக்கு செல்லமுடியாது அவதியுறுகின்றவர்களின் (குறிப்பாக அரசாங்க பணியாளர்கள், மற்றும் ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலையினை கருத்தில் கொண்டு) வேண்டுகோளுக்கு அமைவாக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 03.04.2020 (காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 2.00 மணிக்கு வரை) இலங்கை வங்கியின் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.
சேவையினை வல்வெட்டித்துறை, தொண்டைமனாறு, வல்வெட்டி மற்றும் பொலிகண்டியில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதனை வாடிக்கையாளர்களுக்கு அறியத்தருகின்றோம்.
நேர அட்டவனையின் படி முதலாவதாக 09.00 மணிக்கு ஆரம்பமாகும் ஒவ்வொரு இடமாக நடைபெறும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.