கண்ணீர் அஞ்சலி - ஜவகர்லால்நேரு குமாரசுவாமி - கனடா வல்வை ஒன்றியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2020 (வியாழக்கிழமை)
*வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு சங்கத்தின் கண்ணீர் காணிக்கைகள்* .
கொரோனா தொற்றினால் கனடாவில் வல்வெட்டித்துறை *ஜவர்ஹர்லால்நேரு ராஜேஸ்வரி* தம்பதிகள் மரணமடைந்தனர்.
நேரு ஜயா என அனவராலும் அழைக்கப்பட்ட ஜவர்ஹர்லால்நேரு குமாரசாமி அவர்கள் செவ்வாய் கிழமை(14-04-2020) கொரோனாத் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் மரணமானார்.
இவரது துனைவியார் ராஜேஸ்வரி புதன் கிழமை (15-4-2020) மரணமானார்.
இவர்கள் இருவரும் ரொறன்ரோ ஸ்காபறோ பகுதியில் அமைந்துள்ள வயோதிபர் நீண்டகால பராமரப்பு நிலையத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் கொரோனாத் தொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளனர்
ஜவர்ஹர்லால்நேரு அவர்கள் திரு குமாரசாமி அன்னலெட்சுமி தம்பதிகளின் புதல்வராவார். இவர் மோதிலால்நேரு, பாலச்சந்திரன், நெப்போலியன், கீதாஞ்சலி, சுபாஜனி ஆகியோரின் சகோதரராவார்.
வல்வெட்டித்துறையில் 1932ம்ஆண்டு பிறந்த இவர் சிதம்பரக் கல்லூரியில் கல்வி கற்று இலங்கை தபால் திணைக்களத்தில் அதிபராகப் பணிபுரிந்தவர்.
1990 களின் இறுதியில், கனடா வந்த நேரு அவர்கள கல்விகற்பதற்கு வயதெல்லை இல்லை என்பதற்கிணங்க தனது 67ம் வயதில் ரொறன்ரோ யோக் பல்கலைக் கழகத்தில் BA சிறப்பப் பட்டத்தை படித்து முடித்தார். அதன் பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பிறன்ச்(French) மொழியையும் கற்றுத் தேறியவராவார்.
1990ம் ஆண்டு வல்வெட்டிதுறை நலன்புரிச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தலைவராக தெரிவு செய்ப்பட்டு தனது சமூக சேவையை ஆரம்பித்த அவர், உலகத்தமிழர் இயக்கத்தில் மொழி பெயர்பாளராகப் பணியாற்றினார், என்பதுடன் உலகத்தமிழர் பத்திரிகையில் பல அரசியல் கட்டுரைகளை எழுதியதுடன் கனடியச் செய்திகளின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் 'கனடா உலகத்தமிழர்' பத்திரிகையில் தொடர்ந்து பணியாற்றிய நேரு ஜயா அவர்கள் வயது முதிர்வின் கரணமாக தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இறக்கும் வரை தமிழ் தேசியத்தை நேசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் தலைவராக இருந்த அமரர் ஜவர்ஹர்லால்நேரு ராஜேஸ்வரி தம்பதியினர் ஆத்மா சாந்தியடைய வல்வெட்டித்துறை நலன்புரி சங்கம் பிரார்த்திப்பதுடன் இத் தம்பதியினரின் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினர்க்கு சங்கத்தின் சார்பில் எம் ஆழ்ந்த இரங்களையும் தொரிவித்துக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.