பொதுவாகவே சிறுவர்களுக்கு ஊரடங்கு என்கிற விடயம் புதிதாக திடீரென்று வந்ததாகவே உள்ளது. கொரோனா தொற்று தொடர்பில் பெரியவர்களும் பதற்றமடையும் போது அது குழந்தைகளையும், சிறார்களையும் பாதிக்கும்.
பொதுவாகவே இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பதற்றமடைந்தால் அதனை கிரகிக்கும் ஆற்றல் உள்ளது. பெற்றோர்கள் முதலில் பதற்றப்படாமல் இருப்பதன் மூலம் பிள்ளைகளை பாதுகாக்க முடியும்.
சிறார்களுக்கு தங்களது பிரச்சினைகள் தொடர்பில் வார்த்தைப்படுத்துவது கஷ்டமாக இருக்கும். நாங்களும் தெளிவில்லாமல் சொன்னால் விளங்க கடினமாக இருக்கும். அதனால், பெற்றோர்கள் சரியான தெளிவுடன் இந்த நிலைமையை பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.
தொடர்ந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பிள்ளைகள் சலிப்படைகிறார்கள். இதனால் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே மோதல் ஏற்படுகின்றது. ஆகவே சலிப்படையாமல் நாட்களை கொண்டு போதவற்குரிய சரியான நேர திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். உடல் பயிற்சிகளோடு மனதை ஒருங்கமைக்கும் பயிற்சிகளையும் மேற்கொள்வது அவசியமானதாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.