அடுத்த வருடம் 2021 பாடசாலையின் புதிய தவணை ஜனவரி 11ம் திகதி ஆரம்பமாகும்.
தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்கள் அன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குமாறு அதிபர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் மேல் மாகாணத்தில் கொழும்பு கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரி;வுக்குட்பட்ட பாடசாலைகளும் எதிர்வரும் 11ம் திகதி ஆரம்பிக்கப்பட மாட்டாது.
இந்த வருடத்திற்குரிய பாடவிதானங்களை நிறைவு செய்யாத பாடசாலைகள் இருக்குமாயின் அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதிக்குள் இதற்காக முறையான திட்டமொன்றை முன்னெடுக்குமாறும் மாகாண அதிகாரிகளுக்கும் அதிபர்களுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய மேலதிக தகவல்களை அடங்கிய சுற்றுநிருபமும் பாடசாலை நடவடிக்கைகளை உள்ளடக்கிய நாட்காட்டியும் கல்வி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.