ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் 'எம்பாவாய்' (எம் + பாவை = எம்பாவை. இது விளியேற்கும்போது எம்பாவாய் ஆயிற்று. சைவசமயக்குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டிலுள்ள திருவாதவூரில் தோன்றினார். தந்தையார் சம்புபூதகிருதயர் தாயார் சிவஞானவதி. மணிவாசகருக்கு வாதவூரர் என்றுபெயரிட்டனர். அவருக்கு இறைவனால் அருளைப்பெற்ற பெயர் மாணிக்கவாசகர் என்பதாகும். வாதவூர் மதுரைக்கு தெற்கே 12மைல் தொலைவில் உள்ளது.
மார்கழி மாதத்தில் மணிவாசகர் பாடிய திருவெம்பாவைப் பாடல்களை பாடி சங்கு ஊதி மணி அடித்து வல்வையின் வீதிகளில் அதிகாலையில் வலம் வருவார்கள். நாம் சிறுவயதில் இருந்து அந்த மணிச்சத்தம் கேட்டவுடன் எழுந்து வல்வை வாலாம்பிகை சமேத வைத்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று வரு வோம். வீடுகளில் பெண்கள் கோலம்போட்டு மார்கழிப்பிள்ளையார் வைப்பார் கள். இறுதிநாள் திருவாதிரை அன்று அதிகாலை 5மணி அளவில் நடராஜருக்கு விசேஷ அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து நடராஜர் ஆருத்திரா நடனமும் நடைபெறும். இந்த அருட்காட்சியைப் பார்க்க அயற்கிராமத்து மக்களும் சிவன் கோயிலை நாடி வருவார்கள். இந்தத் திருவிழாவின் உபயகாரர் வல்வை குச்சம்வீதியை வதிவிடமாகக்கொண்ட நா.மகாலிங்கம்(தண்டயல்) குடும்பத்தினர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.