தேசிய ரீதியில் வீரர்களை உருவாக்கும் நோக்குடன் எனது சொந்த முயற்சியில் S & S SPORTS ACADEMY எனும் விளையாட்டு நிறுவனத்தை வல்வெட்டித்துறையில் ஆரம்பித்து உதைப்பந்தாட்டம் , நீச்சல், மேசைப்பந்தாட்டம், சதுரங்கம்,கரம் ஆகிய விளையாட்டுக்களுக்கு பயிற்சி அளித்து வந்தோம்.
தற்போது இலங்கையில் 72 ஆவது தேசிய விளையாட்டாக ஆரம்பித்த கால் மேசைப்பந்தாட்டத்தை வடமாகாணத்தில் முதல்முதலாக வல்வெட்டித்துறையில் ஆரம்பித்து கடந்த 12.04.2021 திங்கட்கிழமை வடமாகாண ரீதியில் நடைபெற்ற சிநேக பூர்வ போட்டியில் யாழ்மாவட்டத்தை பிரதிநிதி படுத்திய எமது வீரர்கள் முதலாவது இடத்தினை பெற்றுக்கொண்டனர். இதன் பலனாக இலங்கை கால்மேசைப்பந்தாட்ட சங்கத்தினால் கிளிநொச்சியில் நடாந்தப்பட்ட பயிற்சிமுகாமிற்கு (சர்வதேச பயிற்சியாளரான கங்கேரி நாட்டவரான) மிலான் பயிற்சியாளரினால் கடந்த 16,17,18.04.2021 பங்கு பற்றியிருந்தனர்.
இதன் விளைவாக எதிர்வரும் 02.05.2021 திகதி கொழும்பில் தேசிய ரீதியான கால்மேசைப்பந்தாட்ட போட்டியில் பங்குகொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இரும்பினும் கொழும்பிற்கு போட்டிக்கு செல்வதால் பாரிய செலவு ஏற்படும் தொடர்ச்சியாக என்னால் தனிப்பட்ட ரீதியாக பணம் செலவழிக்க முடியாதுள்ளதால் ஆர்வமுள்ள விளையாட்டு ஆர்வலர்களிடம் இருந்து உதவிகளை வேண்டி நிற்கிறேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.