யோகா தினம் - யூன் 21 -Yoga Day - திருமதி ப.அதிரூபசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2021 (புதன்கிழமை)
யோகா தினம் - யூன் 21 -
Yoga Day
ஜூன் 21 ம் திகதி உலகம் முழுவதும் சூரியக்கதிர்களின் பிரகாசமான வெளிச்சம் நிறைந்த நாள். வானிலை ஆய்வு அறிக்கையின் படி வல்லுனர்கள் ஜூன் 21யை ஒரு யோகா நன்னாளாக உலக அரங்கில் பிரகடனப்படுத்தியுள்ளார்கள். இதுவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ம் திகதியில் யோகாதினம் என்று வரவேற்கப்படுகிறது. இன்று யோககலையும் யோகாசனப் பயிற்சியாக வளர்ந்து வருகிறது.
எல்லாக் கலைகளைப் போலவே யோககலைக்கும் முழுமுதற்கடவுள் சிவபெருமானே. அந்த வகையில் இந்து மத மரபில் பல்லாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்தது தான் யோகக்கலை. பொதுவாக யோகாசனம் என்பது மனித வாழ்க்கை முறையைச் சரியான வழியில் கற்றுக்கொள்வதே. மனித ஆரோக்கியத்திற்கு இது மிகவும் அத்தியாவசியமாகும். இந்து தர்மம் கூறுகின்ற வழிமுறைகளை பின்பற்ற தெரியாதவனுக்கு எந்த யோகமும் கைக்கூடாது என்பது ஓர் தத்துவம்.
நமது உடலும் உள்ளமும் ஆரோக்கியமான கருவியாக யோகாசனம் நிகழ்கின்றது. நமது உடலில் உள்ள சகல நாடி நாளங்கள், நரம்பு மண்டலங்கள், எலும்புகள், தசைகள் எல்லாவற்றையும் வலிமையாக்கி அவற்றின் மூலம் செயல் ஆற்றல்களை அதிகரிக்க செய்கின்றன. அத்துடன் ஆசனங்களைப் பயிற்சியாக எடுத்துக் கொள்வதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பலவிதமான நோய்களுக்கும் யோகாசனம் ஒரு அருமருந்தாக அமைகின்றது.
பலவிதமான கொடிய நோயிலிருந்து நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும். யோகாசனப் பயிற்சியையும். பிராணாயாமம் (அதாவது மூச்சுப் பயிற்சியும்) விடா முயற்சியாக செய்து வர நோய்தாக்கத்திலிருந்து விடுபடமுடியும் என்று யோகா ஆய்வாளர்கள் அறியத் தருகிறார்கள்.
ஆனந்த யோகாலயாவின் ஆசிரியை திருமதி சியாமளா சிவநேசன் இவர் இந்தியாவில் யோகாசனக் கல்வியில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்களும் வாங்கியவர். இது மட்டுமல்லாமல் தான் பயின்ற யோகாசனக் கலையை றோ.க.பாடசாலை மண்டபத்தில் வாரத்தில் 3நாட்கள் திங்கள், புதன், வெள்ளி மாலை 4 மணி முதல் 5 மணிவரை பாட வகுப்பாக நடத்துகின்றார்.
இந்த செயல் திறன் அவரின் பொது நலமான சேவையை பாராட்டுக்குரியதும் வரவேற்கதக்கதுமாகும். அவரின் குறுகிய கால சேவையிலேயே மாணவிகள் போட்டிகளில் பங்குபற்றி தங்கம் ,வெள்ளி, வெண்கலம் போன்ற பதக்கங்களைப் பெற்றுள்ளார்கள். அதற்கான சான்றிதழ்களையும் வழங்கியுள்ளார்கள். நானும் இதில் ஒரு மாணவி. இதற்கு அடிப்படை அவரின் வழிநடத்துதல். இன்றைய சூழ்நிலையிலும் இணைய வழி வகுப்புக்கள் நடைபெறுகின்றன.அவரின் சேவை மனப்பான்மையை மீண்டும் பாராட்டுகிறேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.