வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சன்னிதியான் ஆச்சிரமம் சைவ காலை பண்பாட்டு பேரவை வன்னிப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி செயல் திட்ட உதவிகளை கடந்த திங்கட்கிழமை அன்று வழங்கியுள்ளது.
வவுனியா மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த ஜி.சீ.ஈ சாதாரணதரப் பரீட்சையில் சிறப்பு பெறுபேறுகளைப் பெற்ற பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட 13 மாணவர்களைத் தெரிவு செய்து தலா ஒவ்வொரு மாணவர்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் நிதியும், 3 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசியமான உணவுப் பொருட்களும் (அரிசி,சீனி,மா, தேயிலை, பருப்பு) மற்றும் கல்வி உபகரணங்களும்(கொப்பி) வழ்ங்கப்பட்டன.
இத் உதவித்திட்டம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலைகளான கணேஸ்வர மகா வித்தியாலயம் - பாவற்குளம் , வவுனியா மிகா வித்தியாலயம், கலைமகள் வித்தியாலயம் - நெடுங்கேணி, ஸ்ரீநாகராசா வித்தியாலயம் - வவுனியா, சோமரசன் குளம் மகா வித்தியாலயம், ஒலுமடு மகா வித்தியாலயம் - நெடுங்கேணி, நெடுங்கேணி மகா வித்தியாலயம், மான்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சென் சேவியர் ஆண்கள் பாடசாலை, ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களது இல்லத்திலும், பாடசாலையிலும் நேரடியாகச் சென்று நிதியும், உதவிப் பொருட்களையும் அமுதகலாசுரபி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் அவரோடு இணைந்த ஆச்சிரம திண்டார்களாலும் கையளிக்கப்பட்டன.
இந்த உதவித் திட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் பூ, சுஜீவன், வாவினியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் த, யோகராசா, உறுப்பினர் வே.குகதாசன், வாவினுயா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொ.தேவராசா அறப்பணிச் செயற்பாட்டாளர் இ.தயாபரன் ஆகியோர்கள் பங்குபற்றினார்கள். (ஈழநாடு)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: October 14, 2021 at 23:11
மிகசிறந்த செயல்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.