இன்றைக்கு உள்ளங்கைகளுக்குள் எல்லாவிதமான குழும தொடர்பு சமூக செயலிகளும் வந்த பின்னரும் ஒரு இணையம் காலை எழுந்ததும் தன்னை நோக்கி இழுக்கிறது என்றால் அதில் ஏதோ ஒரு கண்ணுககு தெரியாத ஆகர்சிப்பு இருந்தாக வேணும்.அந்த பிணைப்பு என்பது எமது மண்மீதான எமது ஊர்மீதான எமது பிணைப்பின் எதோ ஒரு ஆணிவேர் அறுபடாத ஈர்ப்பு என்றே கொள்ளலாம்.
வல்வெட்டித்துறை. ஓஆர்ஜி இணையம் என்பதும் அந்த ஈர்ப்பின் ஒரு குறியீடாகவே இந்த பத்து வருடங்களில் எம்முடன் பயணிக்கிறது. நாமும் அதனுடன் பயணிக்கிறோம்.
அதனை வாழ்த்துவதுடன் அதன் ஆசிரியபீடம் அதனை தினமும் தரவேற்றுபவர்கள் என்று அனைவருக்கும் நன்றியும் சொல்லியாக வேண்டும்.நன்றிகள்.
சரி இனி விசயத்துக்கு வருவோம்..தினமும் அதிகாலை கண்விழித்ததும் தொலைபேசியில் ஏராளமான வட்ஸ்அப் குழும செய்திகளும் வைபர் குழு செய்திகளும் என்று நிரம்பி வழிந்தாலும் அதன் ஏதோ ஒரு செயற்கைத்தனத்தில் இருந்து மீண்டு ஒரு ஆலமர நிழலில் அல்லது ஒரு பின்னேர பொழுதில் ஊரின் வாசிகசாலை ஒன்றில் அமர்நதிருப்பது போன்ற உணர்வை தருகிறது வல்வெட்டித்துறை. ஓஆர்ஜி இணைய வாசிப்பு.
இத்தனைக்கும் பெரீய டாம்பீகமான கண்ணை வரும் வண்ணங்களில் வல்வெட்டித்துறை ஓஆர்ஜி இணையத்தின் வடிவமைப்பு இருக்கவில்லை.ஆனாலும் அது எம்மை தினமும் தன்னை வாசிக்க தூண்டுகிறது என்றால் அது எதனால்?
இங்கேதான் இருக்கிறது. இந்த சிறிய ஊரின் அல்லது நிலத்தின் வாசிப்பு மீதான தாளாத தேடல்.
பெரிய மூன்று புத்தககடைகளும் அங்கே வரும் தினசரிபத்திரிகைகளும் வாராந்த சஞ்சிகைகளும் பத்துக்கும் மேற்பட்ட வாசிகசாலைகளும் அதில் நிறைந்து கிடந்த புத்தகங்களும் காண்டேகரும் அகிலனும் கல்கியும் டால்ஸ்டாயும் தாத்தோவ்ஸகியும் நமது ஊரின கையெழுத்து சஞ்சிகைகளும் என்று இந்த ஊரின் வாசிப்பு பிரமிப்பு ஊட்டுபவை. அந்த வாசிப்பு மரபு என்பது இன்றும் தொடர்கிறது என்றால் அதற்கு காரணமான மிக முக்கியமான ஒன்று வல்வெட்டித்துறை. ஓஆர்ஜி.
எழுத்தும் வாசிப்பும் தான் ஒரு சமூகத்தின் திசைவழியை நிர்ணயம் செய்வதில் மிகமிக முக்கியமான ஒன்று என்பதில் ஆழமான நம்பிக்கையும் அதற்கே உரித்தான வரலாற்று சான்றுகளும் உண்டு.
வல்வெட்டித்துறை ஓஆர்ஜி இணையம் இன்னும் பலபல வெற்றிகளையும் இன்னும் பல பத்து வருடங்களையும் தாண்டி தலைமுறை தாண்டியும் பயணிக்க வாழ்த்துகிறேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.