வல்வை சன சமூக நிலையத்தில் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2015 (சனிக்கிழமை)
உலக சிறுவர் தினத்தையொட்டி வல்வை சன சமூக சேவா நிலையத்தில் நடாத்தப்பட்டுவரும் கற்றல் மையத்தில் சிறுவர் தினம் நேற்று முந்தினம் (01) கொண்டாடப்பட்டது. மாலை 6 மணியளவில் கற்றல் மையத்தில் கல்வி கற்கும் சிறுவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு உலக சிறுவர் தினம் பற்றி விளக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வல்வை சனசமூக சேவா நிலைய உறுப்பினர்கள் சிலர், கலாநிதி சபா இராஜேந்திரன், கப்டன் சிவநேசன், திருமதி சியாமளா சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
சுமார் 10 மாணவர்களுடன் 1 மாதம் முன்னர் ஆரம்பிக்கபட்ட இந்த மாலை நேர கற்றல் மையத்தில் தற்பொழுது சுமார் 40 வரையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.