சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசக விழாவை முன்னிட்டு மாணவர்களிடையே போட்டிகள் நடாத்தப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2015 (சனிக்கிழமை)
தொண்டைமானறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பாண்பாட்டு பேரவையால் ஆச்சிரமத்தில் வருடந்தோறும் நடாத்திவரும் திருவாசக விழாவை முன்னிட்டு மாணவர்களிடையே இம்முறையும் போட்டிகள் நடாத்தவுள்ளது. .
தரம் 5,6 மாணவர்களுக்கிடையே சிவபுராணத்திலும், தரம் 7, 8 மாணவர்களுக்கு திருவெம்பாவையிலும், தரம் 9,10 மாணவர்களுக்கு திருப்பள்ளி எழுச்சியிலும், போட்டிகள் நடைபெறவுள்ளன.
போட்டிகள் எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெறவுள்ளது.
போட்டியில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பாக திருவாசக போட்டிக்குழு, சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவை, தொண்டைமானாறு. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோட்டுக் கொள்கின்றார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.