துரோணர் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்.. வாழ்த்துகிறேன்.. - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2016 (சனிக்கிழமை)
நெடியகாடு இளைஞர்கள் வழங்கிய துரோணர் திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன்.. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்..
அவர்களுடைய ஒவ்வொரு படைப்பிலும் பாரிய பாய்ச்சல் தெரிகிறது.. இதே வேகத்தில் சென்றால் எட்ட வேண்டிய தூரம் தொலைவில் இல்லை.. வெகு விரைவில் இலக்கைப் பிடித்துவிடலாம்..
அனைத்துக் கலைஞர்களுக்கும் மகத்தான பாராட்டுக்கள்.. தொடர்ந்து முயற்சிக்கவும்..
படத்தை பின்வரும் கோணங்களில் நோக்கினேன்..
முதலாவது திரைக்கதை.. மிக நேர்த்தியாக உள்ளது.. இன்று நமது மண்ணில் காணப்படும் மூன்று பெரிய சிக்கல்களை காட்டியிருந்தீர்கள்..
01. மதுவால் வரும் அவலம்.. 02. பெரியோரை மதிக்காத போக்கு.. 03. பொறாமையால் வரும் அவலம்..
இவைகளை நன்கு படம் பிடித்துள்ளன காட்சிகள்..
கதையின் சிறப்பம்சம் : குற்றம் செய்யும் எவரையும் பழிக்குப் பழி வாங்கக் கூடாது என்ற பண்பட்ட வழிகாட்டலாகும்.. ! பாராட்டுக்கள்..
ஆனால்..
தற்கொலைக்கு திரைக்கதை ஒரு காலமும் வழிகாட்டக்கூடாது..
தற்கொலை பொறாமையை விட மிகப் பெரிய குற்றச் செயலாகும்.. திருந்தி வாழ திரைக்கதை வழிகாட்ட வேண்டும்... மற்றப்படி சிறப்பானது.
இறந்த இளைஞன் தற்கொலை செய்யது திருந்தியிருந்தால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் எண்ணிப்பாருங்கள்...!
02. ஒரு திரைப்படம் ஓர் ஊரை மட்டும் மையப்படுத்தி எடுக்கப்படுவது புதுமையானது ஏனென்றால் திரைப்படம் உலகத்திற்கு பொதுமையானது.. இருப்பினும் அந்த ஊரின் அழகுகளை சிறப்பாகக் காட்டுகிறது.
நமக்கு மலரும் நினைவுகளாக இருக்கிறது.. மூதாட்டி இருக்கும் கொட்டில் வல்வை படுகொலை நடந்தபோது நாம் காயப்பட்ட ஒரு பெண்ணுக்கு சிகிச்சையளித்த இடம்..
03. படப்பிடிப்பு சிறப்பாக உள்ளது, பின்னணி இசை, பாடல், பாடல்வரிகள் யாவும் நன்றாக உள்ளன.
நடிகர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள்.. சிறப்பாக தாயாக நடித்தவர், அண்ணன் கலைப்பரிதி தேவதாஸ், இளம் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
குறைகள் இருக்கிறதா.. நீங்கள் கேட்பது தெரிகிறது...
கலைஞர்கள் எவருமே குறைகளை வேண்டுமென அனுமதிப்பதில்லை.. அவர்களால் முடிந்த உச்சத்தையே தர முயற்சிப்பார்கள்..
எனினும் நம்மால் திருத்தக்கூடிய இடங்கள் திருத்தப்பட வேண்டியவையே.. உதாரணமாக பத்திரிகை நிருபர்கள் வரும்போது ஐந்து கதிரைகள் வைக்கப்பட்டுள்ளன.. இருக்கப் போவது ஐவரென முன்னரே தெரிந்து வைக்கப்பட்டுள்ளன.. நான்கு கதிரைகளை வைத்துவிட்டு இன்னொன்றை வேறு இடத்தில் இருந்து போட்டு காட்சியை இயல்பாக்க வேண்டும்.. இது ஓர் உதாரணம் குறையல்ல..
தமிழ் மொழி திரைப்படத்தில் பேசப்படும்போது விகுதிகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.. மொழி மேலும் செம்மையாக்கப்பட்டு இழுவை ஒலிகள் நறுக்கப்பட வேண்டும்.. வருங்காலத்தில் கவனத்தில் கொள்ளுங்கள்..
பெண்கள் என்றால் கண்டிப்பாக பெண்களே நடிக்க வேண்டும் சமரசம் காணவே கூடாது..
அடுத்த படைப்பு மேலும் அபாரமாக அமையும் எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன.. வாழ்த்துக்கள்..
தங்கத்தமிழன் நல்ல கவிஞராகவும், இயக்குநர் நல்ல ஆற்றலாளராகவும் இருக்கிறார்கள்.. வாழ்த்துக்கள்..
இ. யோகன் பழம்பெரும் கலைஞர் அவருக்கும் இதயத்தால் வாழ்த்துக்கள்.. அவரை 40 வருடங்களின் பின் பார்த்து மகிழ்ந்தேன்..
குறை கூற எதுவும் இல்லை.. ஒன்றுமே செய்யாமல் இருப்பதைவிட செய்து முன்னேறுவது மேலான செயல்..
விரைவில் நுழைவுக்கட்டணத்தோடு படைப்புக்கள் வரட்டும்..
நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை மனதில் ஆறாக ஓடுகிறது..
வல்வையில் மிகப்பெரும் வர்த்தக சினிமாவை உருவாக்க வேண்டும்.. நண்பர்களே கவலை விடுக... தூரம் அதிகம் இல்லை...
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
v.dineskaran [ director of thuronar] (srilanka)
Posted Date: February 18, 2016 at 08:25
எங்களது கலை முயற்சிகளில் முதல் முறையாக ''துரோணர்'' திரைப்படம் வெளியாகி முதல் பத்து நாட்களில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட தடவை you tube காணொளி மூலம் பார்வையுட்டு வெற்றி க்கு வழிவகுத்த இணைய நண்பர்களுக்கும் எங்களது நன்றிகள் ............
k.S.Thurai (Denmark)
Posted Date: February 16, 2016 at 21:56
துரோணர் படக்குழுவினர்க்கு எனது நன்றிகள்.. பதிலுக்கு பாராட்டுக்கள்..
தற்போது யாழில் இருந்து சில திரைப்படங்கள் வருவதாக விளம்பரங்களில் பார்க்கிறேன்..
புலவர் என்ற படப்பிடிப்பு குழுவினர் பல சிறந்த பாடல்களை வழங்கியுள்ளார்கள் என்று அவர்களை பாராட்டி, பல ஆலோசனைகளும் அவர்களுக்கு எழுதியுள்ளேன்..
முதலில் நாம் திட்டமிட வேண்டும்.. வளங்களை உருவாக்க வேண்டும்.. இலக்கைக் குறி வைக்க வேண்டும்..
நாம் செய்தால் எதிரிகூட வேறு வழியில்லாமல் வாழ்த்த வேண்டும்.. இல்லை மௌனமாக இருக்க வேண்டும்..
இந்திரவிழா செய்த நெடியகாட்டு இளைஞர்களால் முடியாதது எது இருக்கப்போகிறது..?
60 களில் நெடியகாட்டில் ஏறிய மகாபாரதம் பட்டத்தின் பெருமையை முந்த இலங்கையில் ஒரு சாதனை உண்டா..?
குத்துவிளக்கு திரைப்படத்திற்கு ஒளி பாய்ச்சியது கணபதி லைற்தான்..
ஈழத்தில் திரைப்பட தயாரிப்பு வெற்றியை தந்த முதன்மையை வல்வை மக்கள் எட்டித் தொட்டு அதிலும் முதல்வர்களாக திகழ வேண்டும் என்பதே என் ஆசை..
மேலும் வல்வை முழுவதையும் ஒன்றிணைத்து பலம் கொடுக்க வேண்டும்...!
எனது காலத்தை வென்றவன் நாடகத்தில் ஊறணியில் இருந்து ஊரிக்காடுவரை நடிகர்கள் நடித்தார்கள்...
தெய்வம்தந்த வீடு படத்தில் நடித்த அண்ணன் முத்துச்சாமியும் உங்களுடன்தான் இருக்கிறார்..
மேலும் சிந்தியுங்கள்... உங்கள் வெற்றி என் வெற்றி..
v.dineskaran [ director of thuronar] (srilanka)
Posted Date: February 15, 2016 at 16:58
மனம் நிறைந்த நன்றிகளுடன் உங்கள் வாழ்த்துக்களையும் கருத்துக்களயும் வரவேற்கின்றோம் ......................துரோணர் திரைப்பட குழு
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.