கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பட்டயச் சான்றிதழ் கற்கை நெறி 2016/2017 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகத்தினரிடையே தமிழ் அறிவின் தரம் வீழ்ச்சியடைந்து வருகின்றமை கண்கூடு. இந்நிலை மாற்றியமைப்பதற்கும், தமிழ் மொழி அறிவை எம்மவரிடையே வளர்ப்படுத்துவதற்குமென கொழும்புத் தமிழ்ச் சங்கம் தமிழ் பட்டயச் சான்றிதழ் கற்கை நெறி ஒன்றினை நடாத்தி வருகின்றது.
இக் கற்கை நெறி ஓராண்டு காலமானது. விரிவுரைகள் வார இறுதி நாட்களில் மட்டும் நடைபெறும். பல்கலைகழக விரிவுரையாளர்களும் தகைசான்ற வளவாலர்களும் இக்கற்கை நெறியினை நடத்திச் செல்வர். இக்கற்கை நெறி அடிப்படை தமிழிலக்கணம், அடிப்படைத் தொடர்பாடல் திறன்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், இடைக்கால தமிழிலக்கியங்கள், நவீன தமிழிலக்கியங்கள், சிறிய அளவிலான ஆய்வறிக்கைகள் என்பவற்றை உள்ளடக்கும்.
ஆசிரியர்கள் ஊடகத்துறை சார்ந்தோர், தமிழில் உயர் கல்வி கற்போர், உயர்வு தமிழறிவு பெறும் ஆர்வமுள்ளோர் முதலியோருக்கு இப்பாடநெறி பயனுடையதாக அமையும்.
பாடநெறியில் சேர்ந்து பயில விரும்புவோர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் விண்ணப்ப படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.