வல்வை வி.க உதைபந்து - சென் அன்ரனிஸ், யங்கமன்ஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2016 (சனிக்கிழமை)
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் அமரர் யோகசந்திரன் (முன்னாள் அதிபர் சிதம்பரக் கல்லூரி ) அவர்களின் ஞாபகார்த்தமாக 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது.
இந்த போட்டியானது அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையில் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியாக அமைகின்றது.
இச்சுற்றுப் போட்டியானது இன்று காலை கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமானது.
முதலாவது குழுக்கான முதலாவது போட்டியில் மணல்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தொண்டைமானாறு கலைவாணி விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 6:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மணல்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம் அடுத்த சுற்றுக்கு தெரிவானது.
இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 6:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற கமபர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நாளை இரண்டாவது குழுக்கான போட்டியும், இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.
40 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் வல்வை விளையாட்டுக்கழக அணி சார்பாக 72 வயதான வல்வை விளையாட்டுக்கழகத்தின் மூத்த வீரரும், முன்னாள் தலைவருமான மு. தங்கவேல் அவர்கள் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.