வல்வை விளையாட்டுக் கழக வீரர்களுக்கு சிவன் அறக்கட்டளை மேலும் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2017 (புதன்கிழமை)
கயிறு இழுத்தல் போட்டியில் வல்வை அணி தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளமை தொடர்பில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட வல்வெட்டித்துறை முன்னாள் நகரசபை பிரதி தலைவர் சதீஸ் அவர்கள், பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியில் 800 M ஓட்டத்தில் சாதனை ஏற்படுத்திய வீராங்கனைக்கு தேசிய மட்டத்திற்கு செல்வதற்குரிய பயிற்சிகளை சிவன் அறக்கட்டளை வழங்க தயாராக உள்ளதாகவும் சதீஸ் அவர்கள் நேற்று நடைபெற்ற வல்வை விளையாட்டுக் கழக பரிசளிப்பு விழாவில் தெரிவித்தார்.
மேலும் கயிறு இழுத்தல் போட்டியில் தேசிய மட்டப் போட்டி அன்று பங்கேற்கும் வல்வை அணி வீரர்களுக்கு தேவையான புரத கலோரி உணவுகளை தமது சிவன் அறக்கட்டளை சார்பாக வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நா.விக்னேஸ்வரன் (ஜக்கியராட்சியம்)
Posted Date: April 26, 2017 at 22:24
சொந்தமண்ணில் நடந்து முடிந்த வல்வை விளையாட்டுக்கழக 57வது
ஆண்டு விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் வீராங்கனைகள்
அனைவர்க்கும் வாழ்த்துகள்.
மேலும் மாவட்டஅளவிலான போட்டிகள்,தேசிய அளவிலான போட்டிகளில்
கலந்துகொள்ள உள்ள அனைத்து வீரர்கள்,வீராங்கனைகள் அனைவருக்கும்
எனது வாழ்த்துக்கள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.