ரேவடியில் நடைபெற்ற ஆண்களுக்கான கடற்கரை கபடி போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலகம் சம்பியன்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2017 (வியாழக்கிழமை)
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்ட செயலகத்தின் விளையாட்டுப் பிரிவினரால் நடாத்தப்பட்ட ஆண்களுக்கான கடற்கரை கபடி போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.
இதன் இறுதி ஆட்டம் கடந்த 01 ஆம் திகதி வல்வெட்டித்துறை ரேவடி மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலக அணிதை எதிர்த்து தெல்லிப்பளை பிரதேச செயலக அணி மோதியது.
ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய பருத்தித்துறை பிரதேச செயலக அணி 42. 26என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.