வல்வை மண்ணுக்கு தன் உடல் பொருள் ஆவி என்ற பேதமின்றி தன் உயிரை அர்பணித்தவர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் - நா.விக்னேஸ்வரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2017 (சனிக்கிழமை)
இவர் ஒரு பல்முகக்கலைஞர் இவர் பங்குபற்றாததுறைகளே இல்லை என்பது வரலாறாகும். தான் பங்கு கொண்ட துறைகளில் எல்லாம் முழுமையான பங்களிப்பையும் நல்கி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர். எந்தத்துறைகளிலும் நிதந்திரமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டதும் இல்லை. அதனநால்தான் இவருக்கு எந்தத்துறைகளிலும் போட்டியாளர்களாக எவருமே இருந்தது இல்லை. ஒவ்வொருதுறைகளிலும் தனக்கு பின்னால் வந்தவர்களை ஊக்குவித்து வாழ்த்தி மகிழ்தவர்.
இவர் ஒரு ஆசிரியரும் ஆவார்,கல்லூரி படிப்பை முடித்து விட்டு நண்பர்கள் உடன் சேர்ந்து இலவசமாக (இரவு)பாடசாலை ஆரரம்பித்து ஆசிரியராக கடமையாற்றினார்.( நான் இந்தபாடசாலையில் படடித்து பயன்பெற்றவன்). இன்று அதிரூபசிங்கம் மாஸ்டரை நினைகக்கும் போது அந்தபாடசாலையில் கடமையாற்றிய ஆசிரியர்கள் எல்லோருமே நினைவில் வருகின்றனர் தன்னலமற்வர்கள். இன்றும் பொதுவாழ்வில் இனைந்து செயலாற்றுகன்றனர்.
எல்லோரிடமும் எழிமையாக நான் பெரியவன் நீ சிறியவன் என்ற பாகுபாடின்றி பழகுவார், எந்த செய்திகளைப்பறி இவரிடம் கூறினாலும் கருத்து கேட்டாலும் அமைதியாக உள்வாங்கி யோசித்து தன் கருத்தை கூறுவார்,அது வேதவாக்காகவே அமையும்.
தன் வாழ் நாழில் வல்வை மண்ணின் கலை,கலாச்சாரம் மேலோங்கவும்,தமழ் இலக்கியம் செழிக்கவும் பாடுபட்ட தன்னலமற்ற, வ.ஆ.அதிரூபசிங்கம் மாஸ்டர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய தெய்வங்களை வணங்குவோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.