பூநகரி, மன்னார் தீவுப்பகுதிகளில் காற்றுவலு மின்நிலையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2017 (திங்கட்கிழமை)
மன்னார் தீவுப்பகுதியில் காற்று வலு மின்நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையிலும் பொலநறுவை மாவட்டத்தில் வெலிக்கந்தையிலும் 2019ஆம் ஆண்டில் சூரியவலு மின்நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது. பத்து மெகாவொட் கொள்ளளவுடன் கூடிய சூரியவலு மின்நிலையங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரிப் பிரதேசத்தில் 20 மெகாவொட் சூரியவலு மின் சக்தி நிலையம்ஆரம்பிக்கப்படவுள்ளது.
100 மெகாவொட் சூரியவலு மின்நிலையம் மொனறாகலை மாவட்டத்தின் சியம்பலாண்டு பிரதேசத்தில் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது.
2030ஆம்ஆண்டளவில் நிலைபேறான எரிசக்தி மூலம் நாட்டின் மின்சக்தித் தேவையில் 70 சதவீதமான தேவையை நிவர்த்தி செய்வது அரசாங்கத்தின் இலக்காகும். (நியூஸ்.lk)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.