வல்வை நகரசபை - தலைவர் எவ்வாறு தெரிவு செய்யப்படவுள்ளார்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2018 (புதன்கிழமை)
கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வல்வை நகரசபையில் எந்தவொரு கட்சியில் பெரும்பான்மை பெறத் தவறிவிட்டன. இதையடுத்து எதிர்வரும் 27 ஆம் திகதி உள்ளுராட்சி மன்ற ஆணையாளரினால் பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை நகரசபைகளுக்கான தலைவர் மற்றும் உபதலைவர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அன்றைய தினம் காலை பருத்தித்துறையிலும் பிற்பகல் வல்வெட்டித்துறையிலும் தெரிவுகள் இடம்பெறவுள்ளன.
உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்ட சகல உறுப்பினர்களும் கூடி ஒரு உறுப்பினரை தலைவராகவும், இன்னொருவரை உப தலைவராகவும் தெரிவு செய்வார்.
இருவர் போட்டிக்குட்படால் வாக்கெடுப்பு இடம்பெறும். வாக்கெடுப்பு உறுப்பினர்களின் விருப்பத்துக்கு அமைய நேரடியானதாகவோ அல்லது ரகசியமானதாகவோ அமையும். வாக்கெடுப்பில் இருந்து உறுப்பினர்கள் விரும்பினால் ஒதுங்கியும் இருக்கலாம்.
தேர்தெடுக்கப்படும் தலைவர் மற்றும் உபதலைவரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் முடியும் வரை அல்லது அன்றைய தினம் ஆணையாளர் எடுக்கும் முடிவுக்கு அமைவான காலம் வரை தொடர்ந்து நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள், சுயேட்சை உட்பட்ட ஐந்து கட்சிகளை சேர்ந்தவர்களாக இருப்பதாலும், இவர்களிடையே எதுவித உடன்பாடு இதுவரை எட்டப்படாததாலும், 27 ஆம் திகதி வரை யார் தலைவர் மற்றும் உபதலைவர் ஆவார்கள் என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே இதுவரை இருந்து வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.