வரியப்பா வையித்திலிங்கம் பெற்ற வள்ளலார் வேலும்மயிலும்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2018 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை என்ற புனித நகரில் தாண்ட கப்பலை விலைக்கு வாங்கி கோயில் கட்டிய வள்ளல்கள் போல் முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்த வள்ளல்கள் வரை சரித்திரம் அறியும்.
அது போல் வள்ளலார் என்று வாழ்ந்தவர் ஒரு சுவாமிகள்தான். அதே வரிசையில் வல்வெட்டித்துறையில் எல்லா வீடுகளிலும் வரிவசுலிப்புக்காக கால் பதித்த ஒரு புனிதர் வரியப்பா வையித்திலிங்கத்தின் மகன்; தான் வேலும்மயிலும். தன் வாழ் நாளின் பெரும் பகுதியை சேவைக்காக வாழ்ந்ததால் ஊர் வாசம் கொண்ட வல்வை மக்களால் மாமனிதர் என்ற பெரும் விருதுக்கும் மேலாக வல்வையின் வள்ளலார் என்று பெருமை கொள்கிறது.
வல்வெட்டித்துறை என்ற சிற்றுரில் இன்றும் முப்பத்தெட்டு கோயில்களில் தினசரி பூஜை நடைபெறுகின்றது. வல்வையர்களின் பாரம்பரியங்களின் ஒன்றான மாலை கருக்கல் வேளையான அந்திப் பொழுதில் உடல் தூய்மை செய்து வீடுகளில் விளக்கேற்றி தெய்வதரிசனம் செய்வது. இப்பழக்க வழக்கங்கள் மெதுவாக அருகி வரும் பழக்கமாக மாறி வருகின்றது. எம் மத்தியல் விரல் விட்டு எண்ணக்ககூடி வல்வையர்களில் வரியப்பா குடும்பமும் ஒன்று இன்றும் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
வல்வையின் வள்ளலார் குடும்பம் வாழ்த உடையமணல் அன்றும் இன்றும் அமைதி புனிதங்களுக்கு உரித்தானது. வல்வையின் 75 வது வெற்றிவிழாவை கொண்டாடும் சமூகம் வாழ்ந்த புனித பூமியது.
வல்வையின் வள்ளலார் வேலும்மயிலும் அவர்கள் நாம் எமது ஊரை கோயில்களை தெய்வங்களை விட்டு ஓடி அலைந்து திரிந்த காலங்களில் அவரது பாரியருடன் இணைந்து ஆற்றிய பணிகள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கின்றது.
வள்ளலார் வேலும்மயிலும் அவர்கள் குச்சம் குப்பைத்திடலாக இருந்த காலத்தில் வாணிபடிப்பகத்தை திறந்து வைத்து அங்கு வாழ்ந்த சமூகத்துக்கு ஆசிகளையும் அறிவுரைகளையும் வழங்கியயிருந்தர்ர். இன்று குச்சம் சமூகம் சரஸ்வதி கோயிலுடன் 60 வது பெருவிழாவையும் நடாத்தி கௌரவ வாழ்வு வாழ்கின்றது.
வல்வையில் வாழ்ந்த இன்றைய புலம்பெயர் சமூகம் தன் அக்கறையாலும் ஆசிகளாலும் வல்வையின் புதிய வரலாற்றை வரைந்து கொண்டிருக்கின்றது. வல்வை சமுதாயத்தின் மூத்த குடிகள் வல்வையில் பரம்பல் ஆரம்பித்த காலங்களில் ஆதிகோவிலடி வைரவரும் ரேவடி வைரவரும் முதல் காத்தல் கடவுள்கள். இன்று 38 தெய்வக்கோயில்கள் 2 சொந்த விளையாட்டு மைதானங்கள் 2 கல்யாண கலாச்சார மண்டபங்கள். அக்காலம் வல்வையின் அடையாளங்களாக ஆலடியும் ஆரசடியும் சூத்திரகிணற்றடியும் என்று இருந்த காலத்தின் இருப்புக்கள் மாறி கௌரவ வாழ்வுக்கு மாறிவிட்டோம்.
வல்வை சமூகம் தன் வீடும் தன் பக்கத்து வீடுதான் தன் சமுகம் என்று வாழ்ந்ததால்தான் இவ்வளவு உயரங்களை தொட முடிந்தது. நாம் எமது சமூக எல்லைக்குள் நின்று ஒவ்வொரு செங்கல்லாக பக்குவமாக அடுக்கி வாழ்ந்தால்தான் வல்வைக் கோட்டையை கட்டி காப்பற்ற முடியும். வல்வையில் வாழ்ந்த வள்ளல்களும் புனிதர்களும் வள்ளலாரும் அதைதான் செய்து காட்டி சென்றார்கள்.
வல்வையின் புலம்பெயர்ந்த வல்வையர்களின் இந்த கண்ணீர் அஞ்சலிகளுடன் இன்னுமெரு 25 வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு கவலை பட ஒரு வல்வை சமூகம் புலத்தில் இருக்குமா என்பது சிந்தனைக்கு உரியது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.