கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா நூல் நாளை வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/06/2018 (வெள்ளிக்கிழமை)
டென்மார்க்கில் வாழ்ந்துவரும் கி.செ.துரையால் எழுதப்பட்ட கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா என்ற சர்வதேச அரசியல் விவகார ராஜதந்திர நூல் வரும் சனிக்கிழமை டென்மார்க்கில் தமிழர்கள் அதிகம் வாழும் கேர்னிங் நகரில் வெளியிடப்பட இருக்கிறது.
கடந்த 6 ஆம் திகதி மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் சில..
வரும் சனிக்கிழமை டென்மார்க்கில் 12 பெண்கள் உரையாற்றுகிறார்கள்..
விழாவிற்கு திரு. வேலுப்பிள்ளை மனோகரன் தலைமை தாங்குகிறார்.
நிகழ்வில் மேற்கண்ட நூலை திருச்சியில் இருந்து சென்னைக்கு எடுத்துவரும் வழியில் கடந்த 21.03.2018 அன்று பெரம்பலூரில் சாலை விபத்தில் மரணமடைந்த தமிழர் நடுவத் தலைவர் செல்வா பாண்டியர், செயலாளர் சுரேஸ் பாண்டியர் இருவருடைய உருப்படங்கள் திரை நீக்கம் செய்யப்படுகின்றன.
நிகழ்வில் நூலை முற்றாகவே வாசித்தவர்கள் மட்டுமே விமர்சன அரங்கிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளமை முக்கிய விடயம்.
அந்தவகையில் பெண்களுக்கான சிறப்பு அரங்கு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 12 உயர்கல்வி கற்ற டென்மார்க் வாழ் தமிழ் பெண்கள் இந்த நூல் விமர்சனத்தை செய்ய இருக்கிறார்கள்.
ஒரு பெண்ணைப்பற்றி எழுதப்பட்ட நூலை பெண்களே தமது கோணத்தில் இருந்து விமர்சனம் செய்கிறார்கள்.
அதேவேளை வைத்தியத்துறையிலும் வர்த்தகத்துறையிலும் சாதனை படைத்த மூன்று இளம் பெண்கள் பாராட்டப்படுகிறார்கள்.
சீனா உட்பட உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று சாதனை படைத்த தமிழ் பெண்கள் பாராட்டப்படுகிறார்கள்.
பெண் விமானி அர்ச்சனா செல்லத்துரை வரவேற்புரை வழங்குகிறார்.
இடைவேளையில் விருந்துபசாரம் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து ஆண்கள் அரங்கு ஆரம்பிக்கிறது, டென்மார்க்கின் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள் உட்பட எட்டு பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள்.
டென்மார்க் தலைநகர் முதல் நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள்.
கல்வித்துறையில் உயர் சாதனை படைத்த இளைஞர்களும் நூலை முற்றாகவே படித்து உரையாற்ற இருக்கிறார்கள்.
சூடான ஆரோக்கியமான விவாதத்தின் பின்னர் இசை விருந்தும் சிறப்பு சிற்றுண்டிகளும் வழங்கப்படுகின்றன.
அனைத்தும் இலவசம் ஆனால் நூலை மட்டும் இலவசமாக வாங்க முடியாது ஒரு பிரதி 100 டேனிஸ் குறோணர்கள்.
பேச்சாளர்கள் நூலை படித்து முடித்தாக உறுதி செய்த பின்னரே மேடையேற வேண்டும்..
வாசகர்கள் பணம் கொடுத்து வாங்கி எழுத்தை மதிக்க வேண்டும், ஆகிய இரு நெறிமுறைகள் பின்பற்றப்படவுள்ளன.
பல ஆண்டுகள் ஆராய்ந்து எழுதப்பட்ட ஓர் நூலை, இரண்டு உயிர்கள் கொடுக்கப்பட்டு வெளிவந்துள்ள நூலை மலினமாக எடைபோடல் கூடாதென பேராளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
டென்மார்க்கில் தமிழர்கள் குடியேறிய வரலாற்றில் 12 பெண்கள் தனியாக விமர்சனம் செய்யும் முதல் அரங்காக இது இருக்கிறது.
மேலும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் உண்டு..
டென்மார்க்கில் தமிழ் எழுத்தும் இலக்கியமும் இன்னமும் அழிந்து போய்விடவில்லை என்பதற்கு இதுவும் ஓர் உதாரணமாக இருக்கிறது.
முன்னைய காலங்களை விட மக்கள் ஆதரவு பலமாக இருக்கிறது புத்தகங்களுக்கு என்பது ஒரு மகிழ்வுச் செய்தியாகும்.
நூல்களை போதிய அவகாசம் கொடுத்து பல ஆண்டுகள் ஆய்வு செய்து எழுதும்போது மக்கள் ஆதரவு தருவார்கள் என்று டென்மார்க்கின் சமூகவியல் தலைவர்கள் கூறுகிறார்கள்.
முன்னைய காலங்களை விட மக்கள் ஆதரவு பலமாக இருக்கிறது புத்தகங்களுக்கு என்பது ஒரு மகிழ்வுச் செய்தியாகும்.
நூல்களை போதிய அவகாசம் கொடுத்து பல ஆண்டுகள் ஆய்வு செய்து எழுதும்போது மக்கள் ஆதரவு தருவார்கள் என்று டென்மார்க்கின் சமூகவியல் தலைவர்கள் கூறுகிறார்கள்.
தகவல் - நூல் வெளியீட்டு ஏற்பாட்டுக்குழு 07.06.2018
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.