வல்வெட்டித்துறை தீருவிலில் நினைவுத் தூபி அமைப்பது தொடர்பில் ஏற்ப்பட்ட கருத்துக்களினால் பெரும் அல்லோலகல்லோலப்பட்ட வல்வெட்டித்துறை நகரசபை வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை நகரசபையின் மாதாந்தக் கூட்டம் நேற்று முன்தினம் புதன்கிழமை முற்பகல் நகரசபை மண்டபத்தில் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளுக்கு நினைவுத் தூபி முதலில் அமைக்க வேண்டும் என்பதும், பின்னர் பொது தூபி அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பொதுத் தூபியினையும் சேர்த்து அமைக்கவேண்டும் என சில உறுப்பினர்கள் விடாப்பிடியாக நின்றனர்.
இதனால் நகரசபைக் கூட்டம் பெரும் அல்லோலகல்லோலப்பட்டது. இறுதியில் சபையினை தவிசாளர் நடத்த முடியாத நிலை ஏற்பட அவர் சபையை விட்டு வெளியேறினார். இதனையடுத்து சபை நேற்று வியாழக்கிழமை வரை ஒத்தி வைக்கப்படுவதாக செயலாளர் அறிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.