கல்விப்பொதுத்தரா தரசாதாரணதரப் பரீட்சை உரியமுறையில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத்பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
மாகாண மற்றும் வலய பணிப்பாளர்களுடன் இது தொடர்பில் இன்று பரீட்சைகள் திணைக்களத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதன்படி சாதாரண தரப் பரீட்சைகளுக்கான சகல நடவடிக்கைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதாக ஆணையாளர்நாயகம் குறிப்பிட்டார்.
அத்துடன் எதிர்வரும் 15ஆம் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுடன் இது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. பரீட்சைக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக வழங்குவது தொடர்பில் அதன் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.