இலங்கை திருமந்திரப் பணிமன்றம் ஏற்பாடு செய்துள்ள திருமூலர் திருமந்திரம் உரை இசை ஒலிப்பேழை வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் 18ஆம் திகதி மாலை 4. மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.
சு.செல்லதுரை(கலாபூசணம், சைவப்புலவர்) அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கௌரவ விருந்தினர்களாக சசிதேவி நீலகண்டன், அபிராமி கைலாயபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டார்.
மேலும் வரவேற்புரையை திருமந்திரப் பணிமன்றத்தின் பொருளாளர் திருமதி கலைமகள் மகேந்திரன் அவர்களும், சிறப்புரையை சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களும், வாழ்த்துரையை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்களும், சிறப்புரையை மூத்த ஒலிபரப்பாளர் மயில்வாகனம் சர்வானந்தா, கல்வி அமைச்சின் திட்டப் பணிப்பாளர் க.பத்மநாதன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
மதிப்பீட்டுரையைப் பல்கலை வித்தகர் உடுவை எஸ்.தில்லை நடராசா வழங்கினார்.
நிகழ்ச்சியைச் சிறப்பிக்கு முகமாக,வில்லிசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.