யாழ்.வடமராட்சி தொண்டைமானாற்றையும், அச்சுவேலி இடைக்காட்டையும் இணைக்கும் வீதியை மூடி கடல் நீர் தேங்கி நிற்கின்றது. தொடர் மழையை அடுத்து கடல் நீர் பெருக்கெடுத்துள்ளமையால் கடந்த சில நாட்களாக இந்த நிலைமை நீடிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த வீதியில் வீதி விளக்குகளும் இல்லை. இதன் காரணமாக இரவு வேளைகளில் குறித்த வீதியால் பயணிப்போர் மேற்படி வீதியை இனம் காண்பதே பெரும் சிரமமாகவுள்ளது.
இதனால் இந்த வீதியால் போக்குவரத்துச் செய்வோர் தினமும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுப்பதுடன் ஆபத்தானதொரு பகுதியாகவும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.