வல்வை நகர சபையில் நவகோடிக்கு பதிலாக புதிய உறுப்பினர்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/12/2018 (வெள்ளிக்கிழமை)
சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதால் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் பதவி விலகினார். தொழிலுக்கு செல்வதனால் சபைக் கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகமளிக்க முடியாததால் உறுப்புரிமையில் இருந்து விலகுவதாக வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் ஒருவர் விலகல் கடிதம் கையளித்துள்ளார்.
கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி ) சார்பில் போட்டியிட்டு வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக தெரிவான சிவசோதி நவகோடி எனும் உறுப்பினரே இவ்வாறு விலகல் கடிதம் கையளித்துள்ளார்.
அவரது வெற்றிடத்திற்கு தாமோதரம்பிள்ளை சதாசிவம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனது வாழ்வாதாரம் கடற்றொழில். ஆழ் கடல் தொழில் செய்வதனால் தொழிலுக்கு சென்றால் கடலில் 10- 15 நாட்கள் தங்கி தொழில் செய்தே கரை திரும்புவேன். இதனால் சபைக் கூட்டத்திற்கு ஒழுங்காக சமூகமளிக்கமுடியாது உள்ளது. அதனால் நானே விரும்பி விலகுகின்றேன் என நவகோடி தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.