பாடசாலை சீருடைத் துணிகளுக்கான வவுச்சரின் கால எல்லை நீடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2018 (சனிக்கிழமை)
பாடசாலை சீருடைத் துணிகளை பெற்றுக் கொள்வதற்கான வவூச்கர்களை மூன்றாம் தவணை விடுமுறை முடிவடைய முன்னர் உரிய பாடசாலைகளுக்கு அனுப்பமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சர்கடமைகளை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இவர் இந்த பணிப்புரையை வழங்கினார். டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை கால எல்லைவிதிக்கப்பட்டிருந்த வவுச்சர்களுக்கான காலத்தை பெப்ரவரி மாதம் 28 ஆம்திகதி வரை நீடிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
நவம்பர்மாதம் 5 ஆம் திகதிக்குள் வவுச்சர்கள் வழங்கப்படவிரு;நததாகவும் கடந்தஆட்சியாளர்களின் செயற்பாடுகளினால் இந்தப் பணி சீர்குலைந்ததாகவும்அமைச்ச்ர் கூறினார். இதேவேளை பாடசாலை மாணவர்;களுக்கானபாடப்புத்தகங்களை பாடசாலை விடுமுறை முடிவடைவதற்கு முன்னர்வழங்;குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.பாடசாலைக் கல்விக்காக தேசிய கொள்கைளை வகுத்துச்செயற்பட்டதாகவும்இ கல்வியுடன் அரசியலை தான் ஒரு போதும் இணைத்துக்கொள்ளவில்லை என்று அவர் வலியுறுத்தினார். பாடசாலைப் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்த கல்வி அமைச்சரின் செய்தியில் கடந்தஆட்சியாளர்கள் நிராகரித்தமை பற்றி அமைச்சர் கவலை வெளியிட்டார்.(news.lk)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.