உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களில் ஒருவராக வல்வை பெண்மணி யசோதா
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2019 (திங்கட்கிழமை)
உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை வல்வெட்டித்துறையைப் பூர்வீமாகக் கொண்ட யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் உயர்நிலைக் கல்லூரி ஒன்றில் வரலாறு, சமூக கலாசார புவியியல் பாடத்தினைக் கற்பிக்கும் இவர், 2014 ஆம் ஆண்டு Australian Council இனுடைய ‘Educational Leadership Mary Armstrong Award’ என்ற விருதையும் 2018 ஆம் ஆண்டு ‘Commonwealth Bank Teaching Award’ என்ற விருதையும் பெற்று இருந்தார். அத்துடன் ‘Educator Australia magazine’ இனால் 35 வயதுக்கு உட்பட்ட ‘வளரும் நட்சத்திரங்களில் 30 பேர்களில் ஒருவராக தெரிவும் செய்யப்பட்டிருந்தார்.
செல்வி யசோதையின் பேரனார் திரு.வல்லிபுரம் அவர்கள் பருத்தித்துறை காட்லிக் கல்லூரியின் உப அதிபராக 80 களின் நடுப்பகுதிகள் வரை கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
N.SIVARATNAM (srilanka)
Posted Date: February 28, 2019 at 20:55
BLESSING IN DISGUISE
WE HAVE TO THANK THE SRILANKAN GOVT, FOR CREATING AN OPPORTUNITY TO YASODA
TO ACHIEVE THIS GLOBAL VICTORY THAT GIVES INTERNATIONAL GLORY TO THE SOIL OF
OUR VALVETTIYHURAI
ஞா. மனோகரன் (ஐக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: February 26, 2019 at 17:42
வல்வை மக்கள் வீரத்தில் மட்டுமல்ல விவேகத்திலும் வல்லவர்கள் என்பதை உலகுக்கு பறைசாற்றிய யசோதை அம்மையாருக்கு வாழ்த்துக்கள்.
Muralee (Canada)
Posted Date: February 26, 2019 at 08:56
Congratulation Yasotha, you make our community proud.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.