வல்வை பொது விளையாட்டரங்கு தீர்ப்பு பெப்ரவரி 3 ற்கு ஒத்திவைப்பு, சுமார் 240 பரப்பு மைதானம் கனவாகலாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை ஊரிக்காடு நெற்கொழு பகுதியில் அமைந்துள்ள பொது விளையாட்டரங்கு வழக்கு நேற்று முன்தினம் முற்பகல் பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற வாதங்களைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளது.
வழக்கு எண் 17924, மற்றும் வழக்கு எண் 17964 என எண்ணிடப்பட்ட 2 வழக்குக்குகள் குறித்த மைதானம் சார்ந்த வழக்கிற்காக உள்ளன. இவைகளில் வழக்கு எண் 17924 இல் எதிர் மனுதாரர்களாக துரைசாமி செல்வராசா (தலைவர் கழுகுகள் வி.க) கந்தசாமி சதீஸ் (செயலாளர் கழுகுகள் வி.க) மற்றும் வல்வை நகரசபையும், குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
நகரசபைக்கும் எதிராக போடப்பட்டுள்ள இந்த வழக்கில், திரு.சிவாஜிலிங்கம் முன்னர் தன்னிச்சையாகச் செயற்பட்டார் என்றும், இதில் பின்னர் உள்ள நகரசபைத் தவிசாளர்களிற்கு சம்பந்தம் இல்லை என தபோதையை வல்வை நகரசபைத் தவிசாளர் உத்தியோகபூர்வ கடிதம் வாயிலாக, மனுதாரரான திரு.கி.வர்ணபாலசிங்கத்திற்கு தெரிவித்து நேற்று முன்தினம் நடைபெற்ற நீதி மன்ற அமர்வில் கலந்துகொள்ளவில்லை.
குறித்த கடிதத்தின் பிரதி (கீழே இணைக்கப்பட்டுள்ளது) நேற்று முன்தினம் ஏனைய 2 எதிர்மனுதாரர்கள்இருவருக்கும் அவர்களின் சட்டத்தரணி மூலம் வழக்கப்பட்டுள்ளது.
வழக்கு எண் 17964 இல் தற்போதைய நகரசபைத் பிரதித்தலைவரும், கழுகுகள் விளையாட்டுக் கழகத் தலைவருமான திரு.சதீஸ் (மனுதாரர் அல்லாமல்) சாட்சியம் அளித்திருந்தார்.
பின்னர் வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவ்ரி 3 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்மனுதாரர் என்ற நிலையிலிருந்து நகரசபையை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க உத்தியோகபூர்வமாக கோரிநிற்பதால், மனுதாரர் தரப்பு வலுவாக உள்ளதாக கணிப்பிடப்படுவதால் 240 பரப்பு மைதானத்தின் மனுதாரருக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.