வல்வெட்டித்துறையில் நேற்று முன்தினம் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது 60 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை போலீசார் தெரிவித்தனர்.
தொண்டைமானாறு கொருடாவில் பகுதியில் கஞ்சா கடத்தப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வல்வெட்டித்துறை போலீசார் கெருடாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு சோதனை செய்தனர்.
சோதனையின் போது வீட்டிலிருந்து 30கிலோ கஞ்சா மீட்கப்பட்டது. போலீசார் வருவதைக் கண்டு வீட்டிலிருந்து எடுத்து செல்ல முற்பட்ட 30கிலோ கஞ்சா அருகில் உள்ள கிணற்றில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தப்பிவிட்டார். அவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதேவளை திங்கட்கிழமை இரவு இதே பகுதியில் கஞ்சா கடப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அங்கு வல்வெட்டித்துறை போலீசார் தேடுதல் நடத்தினர். இத் தேடுதலின் போதுதோட்டக் காணி ஒன்றிலிருந்து 30 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை போலீசார் தெரிவித்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.