சைனிங்ஸ் வி.க சுழல் கிண்ண உதைபந்து - இளங்கதிர், ரேவடி இறுதிப்போட்டியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2016 (வெள்ளிக்கிழமை)
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக முன்னாள் உறுப்பினர் அமரர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த சுழல் கிண்ண உதைபந்தாட்ட தொடர் (2 ஆம் வருடம்) நேற்று முன்தினம்ஆரம்பமானது. இதன் தொடர்ச்சியாக இன்று அரையிறுதிப் போட்டிகள் இடம்பெற்றன.
முதலாவது போட்டியில்
முதலாவது போட்டியாக கடந்த வருடம் வைத்தியப்பா ஞாபகார்த்த சுழல் கிண்ணத்தை வென்ற நடப்புச் சம்பியன் இளங்கதிர் அணியுடன் நேதாஜி அணி மோதியது. முதல பாதி ஆட்டத்தில் இளங்கதிர் அணி கபிலனின் 2 சிறப்பான கோல்களுடன் 2 :0 என முன்னிலை வகித்தது.
இடைவேளையின் பின் நேதாஜி அணி வீரர்கள் தர்சன், தருண் ஆகியோரினால் 2 கோல்களை பெறப்பட்டன. இருப்பினும் நேதாஜி வீரர்களின் தவறால் கிடைத்த தண்ட உதையினை இளங்கதிர்பி அணி வீரர்ர கோலாக்க இளங்கதிர் அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது.
ஆட்டநாயகன் விருதினை 2 கோல்களை பெற்று வெற்றிக்கு வழிவகுத்த இளங்கதிர் வீரர் கபிலன் பெற்றார்.அவருக்கான விருதினை அமரர்ச வைத்திலிங்கத்தின் சகோதரரும் சைனிங்ஸ் வி.க மூத்த உறுப்பினருமான நடராசா செல்வச்சந்திரன் வழங்கி கெளரவித்தார்.
இரண்டாவது போட்டியில்
இரண்டாவது ஆட்டத்தில் தீருவில் அணியுடன் மோதிய ரேவடி அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிகொண்டு இறுதிக்குத் தெரிவாகியுள்ளது.
தொடரில் வெற்றிபெறும் 1 ஆம் 2 ஆம் நிலை அணிகள் 10,000/- marrum 5,000/- ரூபாவினை முறையே வெற்றிக் கிண்ணத்துடன் பெறவுள்ளன.
போட்டிகள் வல்வை றெயின்போ மைதானத்திலே நடைபெறுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.