வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தீர்த்தத்திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2019 (வெள்ளிக்கிழமை)
கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமான வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத்திருவிழா இன்று காலை இடம்பெற்றது. இன்று காலை 0630 மணியளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து கலை 8 மணியளவில் அம்பாள் தீர்த்தம் ஆடுவதற்காக ஊரணி தீர்த்தக் கடற்கரை நோக்கிப் புறப்பட்டார்.
அம்பாளை வரவேற்க நெடியகாட்டிலிருந்து விசேட பறை மேள வாத்தியங்கள் பிரதான வீதி வழியே இசைத்துவந்து மீண்டும் அம்பாளுடன் ஊரணி தீர்த்தக் கடற்கரை நோக்கி சென்றன
அம்பாளுடன் பிரதான வீதி வழியே சில அடியவகள் அங்கப்பிரதட்சணையில் ஈடுபட்டனர்.
விழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் புகைக் கூடுகள் வானில் ஏவப்பட்டன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.