வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் திரு.கோகருணாநந்தராசா இன்று காலமானார். இவருக்கு வயது 76.
கொரொனாவால் பாதிக்கப்பட்டு கடந்த வெள்ளிக் கிழமை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 9 மணியளவில் காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் கொவிட் விதிமுறைகளைப் பின்பற்றி இன்று யாழ் கோம்பயன் மின் மயானத்தில் இடம்பெறவுள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் வல்வை நகரசபைத் தலைவராக பதிவியேற்று, பின்னர் தமிழ் தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதனுடன் இணைந்து செயற்பட்டு வந்திருந்தார்.
தமிழ் தேசியக் கட்சியின் ஆரம்பிப்பாளர்களில் ஒருவரான முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் அவர்களுடன் இணைந்து பல அரசியற் போராட்டங்களில் இவர் கடந்த காலங்களில் ஈடுபட்டு வந்தமை குறிபிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
NAGULASIGAMANY NADANASIGAMANY (Canada)
Posted Date: August 11, 2021 at 20:07
நகரசபைத் தலைவர் திரு.கோ.கருணாநந்தராஜா அவர்களின் பிரிவையிட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.