இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) தெமடகொட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு தெரிவித்தே அவர்கள் இவ்வாறு வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக எரிபொருள் நிரப்புவதற்காக ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
வல்வை சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழே படத்தில் மந்திகையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் காட்சியினைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.