புகழ் பெற்ற இரசாயனவியல் ஆசிரியர் சண்முகசுந்தரம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2019 (திங்கட்கிழமை)
யாழின் புகழ் பெற்ற முன்னாள் இராசயனவியல் ஆசிரியர் கந்தையா சண்முகசுந்தரம் அவர்கள் நேற்று வடமராட்சியில் காலமானார். இவருக்கு வயது 84.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, யாழ் இந்து கல்லூரி, ஹாட்லி கல்லூரி, பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை) ஆகியவற்றில் கடமையாற்றிய இவர் 93ஆம் ஆண்டு வரை வல்வைக் கல்வி மன்றத்தில் கற்பித்திருந்தார்.
அன்னாரின் மூத்த புதல்வன் விந்தன் (சலீம்) விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 87 ஆம் ஆண்டு நெல்லியடி இராணுவ முகாம் தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற மோதல் ஒன்றில் மரணமடைந்திருந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31.12.2019 செவ்வாய்கிழமை காலை கரணவாய் தெற்கு கரவெட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.