கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த விபூசிகாவை அவ்வில்லத்திலிருந்து விடுவித்து தாய் ஜெயக்குமாரியிடம் ஒப்படைப்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.வகாப்தீன் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
கடந்த வருடம் பயங்கரவாத குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு விபூசிகாவும், அவரது தாயார் ஜெயக்குமாரியும் கைது செய்யப்பட்டு ஜெயக்குமாரி பூஸா சிறையில் தடுப்பிலும்விபூசிகா நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சிலநாட்களுக்கு முன் ஜெயக்குமாரியை பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல்நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. அதனை தொடர்ந்து விபூசிகாவை தன்னிடம் ஒப்படைக்குமாறு ஜெயக்குமாரி நீதிமன்றத்தை நாடியிருந்தார். எனினும் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் அறிக்கை சமர்பிக்காது, விபூசிகவை தாயுடன் செல்வதற்கு அனுமதிக்க முடியாது என்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
பின் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில் ஜெயக்குமாரி மற்றும் விபூசிகா மீது தாம் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை பயங்கரவாத தடுப்பு பொலிஸார் விலக்கிக் கொண்டனர். இதனை தொடர்ந்தே தாயுடன் செல்வதற்கு விபூசிகாவை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.